இன்று முதல் இளையராஜா ஃபேன் கிளப்... ஒரு கோடி உறுப்பினர்களுடன் ஆரம்பம்!

|

இன்று முதல் இளையராஜா ஃபேன் கிளப்... ஒரு கோடி உறுப்பினர்களுடன் ஆரம்பம்!

மதுரை: இன்று முதல் இளையராஜாவின் ஃபேன் கிளப் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகிறது. எடுத்த எடுப்பிலேயே ஒரு கோடி உறுப்பினர்களுடன் இந்த அமைப்பு செயல்படும் என்று அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார் இசைஞானி இளையராஜா.

இந்த விழாவின் ஹைலைட்... இளையராஜா ஃபேன் கிளப் எனும் பெயரில், இளையராஜாவின் ரசிகர்களை ஒருங்கிணைப்பதாகும்.

கடந்த ஒரு மாத காலமாக இந்த ரசிகர் மன்ற அமைப்பில் உறுப்பினர் சேர்ப்புப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இன்று முதல் சுமார் 1 கோடி உறுப்பினர்களுடன் இந்த அமைப்பு செயல்படத் தொடங்குகிறது.

இதனை இளையராஜாவே இன்று மேடையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார். இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இளையராஜாவின் மகள் பவதாரிணியும், ட்ரஸ்டிகளாக இயக்குநர் ரத்னகுமார் மற்றும் தயாரிப்பாளர் வேலுச்சாமியும் இருப்பார்கள் என அறிவிக்கபப்ட்டுள்ளது.

 

Post a Comment