மும்பை: பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் கபடி லீக் போட்டிக்கான ஜெய்பூர் அணியை வாங்கியுள்ளார்.
கிரிக்கெட்டில் எப்படி ஐ.பி.எல். உள்ளதோ அதே போன்று கபடி லீக் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த லீக்கில் மும்பை, பெங்களூர், சென்னை, டெல்லி, கொல்கத்தா, புனே, பாட்னா மற்றும் ஜெய்பூர் ஆகிய 8 அணிகள் உள்ளன.
இதில் ஜெய்பூர் அணியை பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் வாங்கியுள்ளார். பெங்களூர் அணியை தவிர மீதமுள்ள அணிகள் வாங்கப்பட்டுவிட்டன. இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் இலங்கையைச் சேர்ந்த 28 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 100 கபடி வீரர்கள் ஏலத்தில் விடப்படுவார்கள்.
கபடி லீக் போட்டிகள் ஜூலை மாதம் 26ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் வரும் ஜூன் மாதம் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
இது குறித்து அபிஷேக் பச்சன் கூறுகையில்,
இது பெருமைக்குரிய விஷயம். ஆற்றல் அதிகம் தேவைப்படும் விளையாட்டு இது. பள்ளியில் கபடி விளையாடியதாலும், விளையாட்டு பிடிக்கும் என்பதாலும் கபடி லீக்கில் அங்கம் வகிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
Post a Comment