வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற ஒரே படத்தில் உச்சத்துக்குப் போன நடிகை ஸ்ரீதிவ்யா, அடுத்து விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
கிராமப் பிண்ணனியில் உருவாகும் இந்தப் படத்தை இயக்குகிறார் எஸ் எழில். தேசிங்கு ராஜாவுக்குப் பிறகு அவர் இயக்கும் படம் இது.
இப்போது சிகரம் தொடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விக்ரம் பிரபு, எழில் படத்துக்காக முற்றிலுமாக தன்னை மாற்றிக் கொள்ளவிருக்கிறாராம்.
விக்ரம் பிரபு நடித்த முதல் படம் கும்கியும் கிராமப் பின்னணியில் அமைந்ததுதான்.
இந்தப் படம் குறித்து இயக்குநர் எழில் கூறுகையில், "இது ஒரு உணர்ச்சிப்பூர்வமான காதல் படம். வழக்கமான கமர்ஷியல் விஷயங்களும் இந்தப் படத்தில் உண்டு. தஞ்சைக்குப் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் படமாக்குகிறோம். எம்எஸ் பாஸ்கரின் மகனாக நடிக்கிறார் விக்ரம் பிரபு.
மெல்லிசைக் கச்சேரி நடத்தும் எம்எஸ் பாஸ்கர் குழுவில் எதிர்பாராமல் பாடகராக நுழையும் விக்ரம் பிரபு, ஒரு பெண்ணில் காதலில் விழுகிறார்... ஆனால் அந்தப் பெண் ஒரு பெரிய பிரச்சினையில் இருக்கிறார்.. எனப் போகிறது கதை. அடுத்த மாதமே ஷூட்டிங் தொடங்கிவிடுவோம்," என்றார்.
Post a Comment