ஷங்கர் இயக்கத்தில் அஜீத்.... செய்தியா, வதந்தியாப்பா?

|

சமீப காலமாக மீடியாவில் அதிகம் அடிபடும் செய்தி அல்லது வதந்தி ஷங்கர் - அஜீத் கூட்டணியில் ஒரு படம் வரப் போகிறது என்பதுதான்.

இது மீடியாவில் உள்ள அஜீத் அபிமானிகளின் நீண்ட நாள் ஆசையும் கூட.

ஷங்கர் இயக்கத்தில் அஜீத்.... செய்தியா, வதந்தியாப்பா?

சரி.. என்னதான் விஷயம்?

சமீபத்தில் அஜீத்தும் ஷங்கரும் திடீரென சந்தித்தார்களாம். அந்த சந்திப்பின் போது, அஜித்திடம் ஒரு கதையின் கருவை நான்கு வரிகளில் ஷங்கர் சொன்னாராம்.

ஷங்கர் பட வாய்ப்புக்காக காத்திருந்த அஜீத்தும், உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.

ஐஸ்வர்யா ராய்

இப்படத்தில் அஜித்தைக் கவர்ந்த ஒரு விஷயம் படத்தின் நாயகி. அது வேறு யாருமல்ல, திருமணமாகி, குழந்தை பெற்ற பிறகும் இன்னும் பல நாயகர்களின் கனவில் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராய்.

ஆர்வம்

ஐஸ்வர்யா ராய்தான் கதாநாயகியாக அஜீத் ஜோடியாக நடிக்கப் போகிறார் என்பது உறுதியானதும் அஜீத்தின் ஆர்வம் பலமடங்கு அதிகமாகிவிட்டதாம்.

டபுள் ட்ரீட்

படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம். அவருக்கு மட்டுமல்லாமல், ஐஸ்வர்யாராய்க்கும் இரட்டை வேடம் என்பது இன்னொரு சுவாரஸ்ய தகவல்!

விஜய்யும்...

ஆனால் இந்த செய்தி இன்னமும் வதந்தி நிலையில்தான் உள்ளது. அதற்குள் விஜய் தரப்பில் ஒரு வதந்தி கிளம்பிவிட்டது. ஆம்.. அவரும் ஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஆர்வமாக உள்ளாராம்!

 

Post a Comment