மதுரை: இன்று இசைஞானி இளையராஜா முதல் முறையாக மதுரை மாநகரில் மிகப் பெரிய இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.
இளையராஜாவின் சங்கீதத் திருநாள் என்ற பெயரில், மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்கிறது இந்த இன்னிசை நிகழ்ச்சி.
இளையராஜா பிறந்தது தேனி மாவட்டம் பண்ணைப் புரத்தில் என்றாலும், அவர் உலகம் போற்றும் இசையமைப்பாளராக உச்சம் தொட்ட பிறகு, மதுரையில் இசைக் கச்சேரி நடத்தியதில்லை.
இப்போதுதான் முதல் முறையாக இசைக் கச்சேரி நடத்துக்கிறார். இளையராஜாவுடன் பணியாற்றும் 80-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கு பெறும் நிகழ்ச்சி இது. சர்வதேசத் தரத்தில் இந்த இசை நிகழ்ச்சி இருக்க வேண்டும் என்பது ராஜாவின் ஆசை. அதற்கேற்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ராஜாவின் இசைக் கலைஞர்கள் மூன்று தினங்களுக்கு முன்பே மதுரைக்கு வந்துவிட்டனர். இங்கே வைத்து தொடர்ந்து ஒத்திகைகள் நடந்து வருகின்றன.
டிக்கெட்டுகள் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டுள்ளன.
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்கள், கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். வெளிநாடுகளிலிருந்தும் பல ரசிகர்கள் இந்த இசை நிகழ்ச்சியைக் காண டிக்கெட் எடுத்து மதுரைக்கு வந்துள்ளனர்.
இந்த இசை நிகழ்ச்சி பற்றிய செய்திகளை இன்று மாலை உங்கள் ஒன்இந்தியாவில் உடனுக்குடன் பார்க்கலாம்!
Post a Comment