திருவனந்தபுரம்: நடிகை பிரியாமணி ஆன்ட்டி ஆகிவிட்டார். இதை அவரே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பருத்தி வீரன் படத்தில் நடிப்பில் மிரட்டியிருந்தார் பிரியாமணி. அதில் இருந்து அவரை பருத்திவீரன் பட கதாபாத்திரமான முத்தழகு என்ற பெயரிலேயே ரசிகர்கள் அழைக்கிறார்கள்.
பருத்தி வீரனுக்காக தேசிய விருது வாங்கிய பிரியாமணிக்கு கோலிவுட்டில் சுத்தமாக மார்க்கெட்டே இல்லை. அதனால் அவர் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நடிக்க அவர் ஆர்வமாக இருப்பதை பல முறை வாய்விட்டு கூறினார். இருப்பினும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்நிலையில் பிரியாமணி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
என் சகோதரர் விசாக்தேவ் மணியின் மனைவி பிரார்த்தனா அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நான் அத்தையாகிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment