சென்னை: நடிகர் சந்தானத்தின் வீட்டு மின் இணைப்பை இன்று துண்டித்தனர் மின் வாரிய அதிகாரிகள்.
வீட்டு உபயோகத்துக்கென தரப்படும் மின்சாரத்தை அவர் முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறி இணைப்பைத் துண்டித்தனர் அதிகாரிகள்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ளது சந்தானம் வீடு. இந்த வீட்டுக்குத் தரப்பட்ட மும்முனை மின்சார இணைப்பை சந்தானம் முறைகேடாகப் பயன்படுத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
உடனடியாக இன்று மின்வாரிய அதிகாரிகள் குழுவாகச் சென்று சந்தானம் வீட்டு மின் இணைப்பைத் துண்டித்தனர். மேலும் இந்த துண்டிப்பாக விளக்கத்தையும் சந்தானம் வீட்டிலிருந்தவர்களிடம் கொடுத்துவிட்டு வந்தனர்.
முறைகேடாக மின்சாரம் பயன்படுத்தியதற்கான அபராதம் செலுத்திய பிறகே மின் இணைப்பு திரும்பத் தரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Post a Comment