சென்னை: கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் அஜீத்துடன் இரு வில்லன்கள் மட்டுமல்லாது... வில்லியும் உண்டு. அவர் இதுவரை நாயகியாக நடித்து வந்த தன்ஷிகா.
இந்தப் படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் தொடங்கி, தொடர்ந்து நடந்து வருகிறது.
இப்படத்தில் அஜீத்துக்கு வில்லன்களாக அருண் விஜய்யும், ஆதியும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இப்போது, இப்படத்தில் ஒரு வில்லியையும் சேர்க்கப் போகிறார்கள். அந்த வில்லி வேடத்திற்கு அரவான், பரதேசி படங்களில் நடித்த தன்ஷிகா.
வில்லன்களை விட இவருடைய கதாபாத்திரம் இப்படத்தில் முக்கியத்துவம் மிக்கதாக இருக்குமாம்.
Post a Comment