ஆழ்வார்பேட்டையில் கௌதமியுடன் சென்று வாக்களித்தார் கமல் ஹாஸன்

|

சென்னை: உலக நாயகன் கமல் ஹாஸன் ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை வாக்களித்தார். அதன் பிறகு அவர் விமானம் மூலம் பெங்களூர் சென்றார்.

ஆழ்வார்பேட்டையில் கௌதமியுடன் சென்று வாக்களித்தார் கமல் ஹாஸன்

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. உலக நாயகன் கமல் ஹாஸன் உத்தமவில்லன் படப்பிடிப்பில் பெங்களூரில் பிசியாக இருந்தார். வாக்களிப்பதற்காக அவர் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு விமானம் மூலம் சென்னை வந்தார்.

ஆழ்வார்பேட்டையில் கௌதமியுடன் சென்று வாக்களித்தார் கமல் ஹாஸன்

அவர் ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்திற்கு எதிரே உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடியில் இன்று காலை வாக்களித்தார். அவருடன் நடிகை கௌதமியும் வந்து வாக்களித்தார்.

வாக்களித்த உடன் அவர் விமானம் மூலம் பெங்களூருக்கு கிளம்பிச் சென்றார். பெங்களூரை அடைந்த அவர் உத்தம வில்லன் படப்பிடிப்பில் இன்று கலந்து கொள்கிறார்.

 

Post a Comment