என்னை டம்மி பீஸாக்கிடுவாங்களோ: கவலையில் நயன நடிகை

|

சென்னை: நயன நடிகையை பீதி அடைய வைத்துள்ளாராம் கண் பட நடிகை.

சிங்கம் இசை வாரிசு இயக்குனரின் படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு நாயகி தேடியபோது நயன நடிகை தானாக வந்து வாய்ப்பு கேட்க அவர்களும்

அவரையே ஒப்பந்தம் செய்துவிட்டனர். அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களில் நடிப்பதை எண்ணி நயன நடிகை மகிழ்ச்சியில் இருந்துள்ளார்.

இந்நிலையில் படத்தில் புதுமுகம் ஒருவரை இரண்டாவது நாயகியாக போடப்போவதாக தெரிவித்துள்ளனர். ஹா புதுமுகம் தானே என்று நயனமும்

கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். புதுமுகத்தை தேடிய இயக்குனருக்கு கண் பட நாயகி நினைவு வந்தது. அவரை படத்தில் ஒப்பந்தம் செய்ய அவருக்கு

ஆசை இருந்தபோதிலும் அவர் எவ்வளவு சம்பளம் கேட்பாரோ என்ற பயமும் இருந்தது.

நடப்பது நடக்கட்டும் என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கண் பட நடிகையை நாடியபோது அவர் என்னவென்றால் ஹீரோவின் பெயரை

கேட்டதும் ஓகே நடிக்கிறேன், சம்பளத்தை பற்றி பேசிக்கலாம் என்று தெரிவித்துவிட்டார். இதை சற்றும் எதிர்பாராத இயக்குனருக்கு ஒரே மகிழ்ச்சியாம்.

ஆனால் இது குறித்து கேள்விப்பட்ட நயனத்துக்கு தான் பீதியாக உள்ளதாம்.

கண் பட நடிகை ஹாலிவுட் நடிகை என்பதால் அவரது கதாபாத்திரத்திற்கு ஓவர் வெயிட் கொடுத்து தன்னை டம்மி பீஸாக்கிவிடுவார்களோ என்பது

தான் நயனத்தின் கவலையாக உள்ளது. இந்நிலையில் ஊதா கலரு ரிப்பன் வேறு படத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாம்.

 

Post a Comment