பரத் படத்துக்காக பாடிய காங்கோ நாட்டு ராப் பாடகர் யபாமா ஜோ!

|

ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை காங்கோ நாட்டு ராப் பாடகர் யபாமா ஜோவைப் பாட வைத்துள்ளனர்.

இயக்குனர் கே பாலசந்தர் நல்லாசியுடன் ராஜம் புரொடக்ஷன்ஸ் சார்பில் புஷ்பா கந்தசாமி மற்றும் எஸ் மோகன் இணைந்து தயாரிக்கும் படம் 'ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி'. பரத் - நந்திதா ஜோடியாக நடிக்கின்றனர்.

பரத் படத்துக்காக பாடிய காங்கோ நாட்டு ராப் பாடகர் யபாமா ஜோ!

இதன் படப்பிடிப்பு பழனி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி மற்றும் கேரளா போன்ற இடங்களில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளன. 555 படத்துக்கு இசையமைத்த சைமன் இசையமைத்துள்ளார்.

பரத் படத்துக்காக பாடிய காங்கோ நாட்டு ராப் பாடகர் யபாமா ஜோ!

இப்படத்தில் கானா பாலா எழுதிய ஒரு பாடலுக்கு இன்னொருவர் பாடினால் புதுமையாக இருக்குமே என்று விரும்பினார் சைமன். எனவே, காங்கோ நாட்டைச் சேர்ந்த ராப் இசைக் கலைஞர் யபாமா ஜோ (YABAMA JO) -வை வைத்து "ஏழரை..." என்ற பாடலை பாட வைத்துள்ளார்.

யுகபாரதி எழுதிய "ஒண்ணுனா ரெண்டு..." என்ற பாடலை விஜய் ஆண்டனி பாடியுள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எல் ஜி ரவிச்சந்தர்.

 

Post a Comment