சென்னை தூர்தர்ஷனில் முதன் முறையாக மெகா தொடர் 'வாழ்வே தாயம்'!

|

சென்னை: தொலைக்காட்சி தொடங்கப்பட்டு சுமார் நாற்பது ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை மெகா தொடர் எதையும் தூர்தர்ஷன் ஒளிபரப்பியதில்லை.

பெரும்பாலும் 13 வாரத் தொடர், அதுவும் வார விடுமுறை நாட்களில் மட்டுமே ஒலிபரப்பப்பட்டு வந்திருக்கிறது.

சென்னை தூர்தர்ஷனில் முதன் முறையாக மெகா தொடர் 'வாழ்வே தாயம்'!

இப்போது முதல் முறையாக "வாழ்வே தாயம்" என்ற மெகா தொடரை சென்னை தொலைக்காட்சி தயாரித்து வழங்குகிறது.

ஜூன் 2 ஆம் தேதியிலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை இந்தத் தொடர் ஒளிபரப்பாகிறது.

சென்னை தூர்தர்ஷனில் முதன் முறையாக மெகா தொடர் 'வாழ்வே தாயம்'!

இது ஒரு நகைச்சுவைத் தொடர். இதில் பாண்டு, மதன்பாப், நித்யா, காத்தாடி ராமமூர்த்தி, ஷோபனா, சத்யஜித், கிரீஸ், நிஷா, சித்ரா, கீர்த்தி சுந்தர், கார்த்திக், பாபி ஆகியோர் நடிக்கிறார்கள்.

காதல் மதியின் பாடல் வரிகளுக்கு ஜான்பீட்டர் இசையமைக்கிறார்.

இந்தத் தொடரை எழுதி இயக்குபவர் ரதீஸ். இவர் முன்னாள் செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவியின் சகோதரர். ரதீஸ் ஏற்கெனவே பல தொடர்களை சென்னைத் தொலைக்காட்சிக்காக எழுதி இயக்கி இருக்கிறார். அத்தனை தொடர்களுமே விருதுகளைப் பெற்றிருக்கிறது.

அகில இந்திய அளவில் தூர்தர்ஷனில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக இவரது தொடர்கள் தேசிய விருது பெற்றுருக்கிறது. இவர் விரைவில் பிரபல நட்சத்திரங்களை வைத்து திரைப்படம் ஒன்றையும் இயக்கப் போகிறாராம்.

 

Post a Comment