ராஜபக்சே விவகாரம்: மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் ரஜினிகாந்த்

|

சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகையை கண்டித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறார்.

மோடி இன்று பிரதமராக பதவியேற்றுக் கொள்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்கிறார். முன்னதாக விழாவுக்கு ராஜபக்சேவை அழைத்ததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ராஜபக்சே விவகாரம்: மோடி பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் ரஜினிகாந்த்

ராஜபக்சே வருகையை கண்டித்து ஜெயலலிதா மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறார். இந்நிலையில் ராஜபக்சே விவகாரம் தொடர்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார். அவர் இன்று ஹைதராபாத்தில் லிங்கா படப்பிடிப்பில் இருப்பார்.

முன்னதாக தேர்தல் பிரச்சாரம் செய்ய தமிழகம் வந்த மோடி ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பின்னர் வெற்றி பெற்ற பிறகு பதவியேற்பு விழாவுக்கு வருமாறு அவர் ரஜினிக்கு அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment