தெலுங்கு சினிமாக்காரர்களின் கோபம், ஸ்ருதிஹாஸனை வழிக்குக் கொண்டுவந்துவிட்டது. கவர்ச்சியா நடிச்சது உண்மைதான். ஆனா அதை வெளியிட மாட்டோம்னு ப்ராமிஸ் பண்ணவங்க, கடைசில மீறிட்டாங்களே என்று புலம்ப ஆரம்பித்துள்ளார்.
எவடு படத்தில் படு கவச்சியாக நடனமாடியிருந்தார் ஸ்ருதி ஹாஸன். இந்தப் படங்கள் இணைய தளங்களிலும் வெளியாகி, பரபரப்பு கிளப்பின. கிட்டத்தட்ட டாப்லெஸ் எனும் அளவுக்கு முன்னழகைக் காட்டியபடி போஸ் கொடுத்திருந்தார் அவர்.
இந்தப் படங்கள் வெளியானது குறித்து அவர் போலீசில் புகார் தெரிவித்திருந்தார். சினிமா படப்பிடிப்புகளை படம் எடுக்கும் பத்து போட்டோ கிராபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இதனை தெலுங்கு தயாரிப்பாளர்கள் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. எனவே, நமக்குள்ளே பேசித் தீர்க்க வேண்டியதை இப்படி போலீஸ் வரை கொண்டு போய்விட்டாரே என்று ஸ்ருதி மீது அதிருப்தி காட்டினர்.
அவரை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்யவும் தயக்கம் காட்டினர்.
இதனால் தனது புகாரை வாபஸ் பெற்றுக் கொள்ளலாமா என யோசிக்க ஆரம்பித்துள்ளார் ஸ்ருதி.
இது அவரது பேச்சிலும் எதிரொலித்தது. இந்த வழக்கு குறித்து கேட்டபோது, "விசாரணையில் இன்னும் எந்த முடிவும் கிடைக்கவில்லை.
நான் அந்தப் பாடலுக்கு ஆடியபோது எடுத்த படங்களை வெளியிடக்கூடாது என உறுதியளித்தனர். நானும் நம்பினேன். இப்போது அவ்வளவு படங்களையும் வெளியிட்டுவிட்டனர்.
எல்லா இடத்திலும் இருப்பது போல் சினிமாவிலும் கெட்டவர்களும், நல்லவர்களும் உள்ளனர். நான் நல்லவர்கள் மீதும் நல்ல விஷயங்கள் மீதும் இனி என் கவனத்தை செலுத்தப் போகிறேன். இப்போதைக்கு இந்த பிரச்சினையைவிட்டு வெளியில் வரவே விரும்புகிறேன்," என்றார்.
Post a Comment