ரஜினியை அடுத்து மோடிக்காக இசை ஆல்பம் தயாரிக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ்

|

சென்னை: பிரதமராக பதவியேற்கும் மோடியை பாராட்டி நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு இசை ஆல்பத்தை தயார் செய்து வருகிறார்.

கடந்த ஆண்டு ரஜினியின் பிறந்தநாளுக்காக வீடியோ ஆல்பம் தயாரித்தவர் நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ். அந்த ஆல்பம் ரஜினி ரசிகர்களிடம் மட்டுமல்ல அனைவரிடமும் அமோக வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து பாரத பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள நரேந்திர மோடியை வருங்கால இந்தியாவை திறம்பட ஆட்சி செய்யும் வல்லமை படைத்தவர் என்று பாராட்டி "மீண்டும் ஒரு சுதந்திரம்" என்ற இசை வீடியோ ஆல்பத்தை உருவாக்குகிறார்.

ரஜினியை அடுத்து மோடிக்காக இசை ஆல்பம் தயாரிக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ்

இது குறித்து ராகவா லாரன்ஸ் கூறுகையில்,

இந்த ஆல்பம் உருவாவதற்கு காரணமே, இதுவரை நமது இளைஞர்களுக்கு நாம் தன்னம்பிக்கை ஊட்ட வேண்டுமானால் "செருப்பு தைத்த ஆபிரகாம் லிங்கம் ஜனாதிபதியானதைப் பற்றி கூறுவது தான் வழக்கமாக இருந்தது.

இந்தியாவில் டீ விற்ற இளைஞனும் பிரதமராக முடியும் என்று நிரூபித்தவர் நரேந்திர மோடி. நாம் இனி சுட்டிக் காட்டக் கூடிய தன்னம்பிக்கை சிகரமாக விளங்குபவர் நரேந்திர மோடி இதற்காகத் தான் இந்த இசை ஆல்பம்.

நான் எந்த ஒரு செயல்களை செய்தாலும் எனது குருநாதர் கே.பாலசந்தரிடம் ஆசி பெற்றுத் தான் செய்வது வழக்கம். இந்த இசை ஆல்பமும் கே.பி. சாரிடம் ஆசி பெற்றே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விரைவில் இந்த இசை ஆல்பம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட உள்ளது என்றார்.

 

Post a Comment