ஆரம்பத்தில் நானும் அமலா பாலும் நண்பர்களாகத்தான் இருந்தோம். ஆனா தொடர்ந்து பத்திரிகைகாரர்கள் கிசுகிசுவா எழுதித் தள்ளினதால, நாங்க காதலிக்க ஆரம்பிச்சோம், என இயக்குநர் விஜய் தங்கள் காதலுக்கு பல விளக்கம் கூறினார்.
தெய்வத் திருமகள் படத்தில்
தலைவா படத்தின் போது, இருவருக்கும் காதல் முற்றி, கல்யாணத்துக்கு வந்துவிட்டதை பத்திரிகையாளர்கள்தான் வெளியிட்டனர்.
இப்போது திருமண நாளும் உறுதி செய்யப்பட்டுவிட்டது. இதனை அறிவிக்க இன்று விஜய்யும் அமலா பாலும் சேர்ந்து நடத்திய பிரஸ் மீட்டில், நாங்க நண்பர்களா இருந்தோம், ஆனா பிரஸ்தான் காதலிக்க வைத்தது,' என்று பத்திரிகையாளர்களை கல்யாணத் தரகர்களாக்கிவிட்டனர்.
விஜய் கூறுகையில், "இந்தத் திருமணத்துக்கு ஒரு வகையில் பத்திரிகையாளர்களும்தான் காரணம். நீங்கள் அவ்வளவு எழுதினீர்கள் எங்களைப் பற்றி.
அமலாபாலும் நானும் முதலில் நண்பர்களாகத்தான் பழகினோம். எங்களுக்குள் ஆரம்பத்தில் காதல் இல்லை. ஆனால், பத்திரிகைகள்தான் எங்களுக்குள் காதல் என்று கிசுகிசுக்கள் எழுத ஆரம்பித்துவிட்டன. அதன்பிறகுதான் காதலிக்க ஆரம்பித்தோம்,'' என்றார்.
த்தோடா..!
Post a Comment