சென்னை: டோலிவுட்டில் நடிக்க தடை உத்தரவு பிறப்பித்த பிறகு நயன நடிகை அடக்கி வாசிக்கிறாராம்.
நயன நடிகை தான் நடிக்கும் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை. இப்படி தான் தெலுங்கில் நடித்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். விளைவு தெலுங்கு படங்களில் நடிக்க ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கால்ஷீட் கொடுப்பதிலும் கறாராக இருந்த அம்மணி சற்று இறங்கி வந்துள்ளாராம். கால்ஷீட் விஷயத்தில் சேட்டை செய்யாமல் சமத்து பிள்ளையாக கேட்கும் தேதிகளை கொடுக்கிறாராம்.
தடை உத்தரவுக்கு பிறகு அம்மணி ரொம்பவே அடக்கி வாசிக்கிறாராம். ஆனால் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் மட்டும் அவர் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை என்று தெரிகிறது.
இருப்பினும் கால்ஷீட் விஷயத்திலாவது பிரச்சனை செய்யாமல் இருப்பதால் அவரை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய இயக்குனர்கள் விரும்புகிறார்களாம்.
Post a Comment