நள்ளிரவு பார்ட்டியில் ரகளை: விஷயத்தை அமுக்க போலீசுக்கு பணம் கொடுத்த நடிகை

|

சென்னை: ஜல் ஜல் நடிகை இரவு நேர பார்ட்டிக்கு சென்று அங்கு ரகளையாகி மேட்டரை அமுக்க போலீசாருக்கு பணம் கொடுத்தாராம்.

தமிழ், தெலுங்கில் நடித்து வரும் பெரிய கண்களை கொண்ட ஜல் ஜல் நடிகை இந்தியிலும் நடித்துள்ளார். பாலிவுட்டில் அவருக்கு மவுசு இல்லாததால் மார்க்கெட் உள்ள கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.

அம்மணி கையில் தற்போது தெலுங்கு படங்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் படப்பிடிப்பு இல்லாதபோது அவர் தனது நண்பர்களுடன் இரவு நேர பார்ட்டிகளுக்கு செல்கிறாராம். அப்படி அண்மையில் அவர், நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றுள்ளார்.

பார்ட்டியில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று இருக்க இறுதியில் பெரிய ரகளையாகிவிட்டதாம். விஷயம் வெளியே வந்தால் தனக்கு பிரச்சனையாகிவிடும் என்று நினைத்த நடிகை போலீசாருக்கு பணம் கொடுத்து மேட்டரை வெளியே வரவிடாமல் அமுக்கிவிட்டாராம்.

நடிகைகள் இரவு நேர பார்ட்டிக்கு செல்வதும், அங்கு ரகளையாவதும் இது ஒன்றும் முதல் முறை அன்று.

 

Post a Comment