திருமணம் எனும் நிக்காஹ் யாரையும் காயப்படுத்தும் படமல்ல- ஆஸ்கார் ரவிசந்திரன்

|

திருமணம் எனும் நிக்காஹ் எல்லோருக்கும் பொதுவான ஒரு படமாகும். இந்த திரைப்படம் யாரையும் புண்படுத்தவோ, காயப்படுத்தவோ எடுக்கப்பட்ட படமல்ல, என்று தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

திருமணம் எனும் நிக்காஹ் படத்தை வெளியிட இஸ்லாமி சமூகத்தினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கை:

ஒவ்வொரு மதத்துக்குள்ளும் இருக்கும் கலாசார பெருமையை வெளிபடுத்தும் படம் தான் 'திருமணம் எனும் நிக்காஹ்'.

யாராக இருந்தாலும் புரிதல் அவசியம் என்னும் கருத்தை வலியுறுத்தும் படமாகும். கணவன் மனைவிக்கிடையே ஆகட்டும், பிள்ளைகள் இடையே ஆகட்டும், நண்பர்கள் இடையே ஆகட்டும், நம்முடன் பணிபுரியும் சகாக்கள் இடையே ஆகட்டும், நம்மிடம் பணிபுரிகிறவர்கள் இடையே ஆகட்டும் எல்லோரிடமும் நாம் பரஸ்பரம் உறவை மேற்படுத்த 'புரிதல்' அவசியம்.

'திருமணம் எனும் நிக்காஹ்' மதங்கள் இடையே கூட கலாசாரம் வாயிலாக புரிதல் அவசியம் என்பதை வலியுறுத்தும் படமாகும். இந்த படத்தை சூழ்ந்து இருந்த பிரச்சனைகள் முடிந்து விட்டன. இஸ்லாமிய சகோதரர்கள் நோன்பு காலம் முடிந்த பின்னர் படத்தை கண்டு ரசிக்கும் வகையில் ரம்ஜான் பண்டிகை அன்றோ அதற்கு பிறகோ 'திருமணம் எனும் நிக்காஹ்' வெளியாகும்."

-இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment