ரமண மகரிஷியின் வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறார் இளையராஜா!

|

ரமண மகரிஷியின் வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறார் அவரது தீவிர பக்தரான இசைஞானி இளையராஜா.

மதுரை மாவட்டம் திருச்சுழியில் பிறந்தவர் ரமண மகரிஷி. மிக இளம் வயதிலேயே பக்தி நிலையை அடைந்தவர் வீட்டை விட்டு வெளியேறி, திருவண்ணாமலைக்கு வந்துவிட்ட அவர், தன் இறுதி நாட்கள் வரை அங்கேயே வாழ்ந்தார்.

ரமண மகரிஷியின் வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறார் இளையராஜா!

இந்தியாவின் மிக முக்கியமான ஆன்மீக குருவாகப் போற்றப்படும் ரமணரின், ஆசிரமம் திருவண்ணாமலையில் உள்ளது. இசைஞானி இளையராஜா இந்த ஆசிரமத்துக்கு அடிக்கடி சென்று தியானம், பிரார்த்தனைகளில் ஈடுபடுவது வழக்கம்.

ரமணரின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் இசைஞானி இளையராஜா. தமிழில் வெளியாகும் இந்தப் புத்தகம், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்படுகிறது.

ஏற்கெனவே ரமண மாலை, குரு ரமண கீதம் என இரு ஆல்பங்களை ரமண மகரிஷிக்காக இளையராஜா உருவாக்கியுள்ளது நினைவிருக்கலாம்.

 

Post a Comment