'பிரீத்தி ஜிந்தாவின் கையைப் பிடித்து இழுத்தார் நெஸ் வாடியா..'- செக்ஸ் புகார் வழக்கில் சாட்சி வாக்கும

|

மும்பை: நெஸ் வாடியா தன்னை பலாத்காரம் செய்ததாக ப்ரீத்தி ஜிந்தா குற்றம் சாட்டிய தினத்தில், ப்ரீத்தியின் கையைப் பிடித்து இழுத்ததையும், அதனால் காயமடைந்து வீங்கியிருந்ததையும் நான் பார்த்தேன் என ஒரு சாட்சி வாக்குமூலம் தந்துள்ளார்.

தனது முன்னாள் காதலனும், கிரிக்கெட் வியாபார கூட்டாளியுமான நெஸ் வாடியா மீது நடிகை ப்ரீத்தி ஜிந்தா கொடுத்த பாலியல் தொந்தரவு புகார் மீதான விசாரணையை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

'பிரீத்தி ஜிந்தாவின் கையைப் பிடித்து இழுத்தார் நெஸ் வாடியா..'- செக்ஸ் புகார் வழக்கில் சாட்சி வாக்கும

மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த மே மாதம் 30-ந்தேதி கடந்த ஐ.பி.எல். போட்டியின்போது தன்னை தொழில் அதிபர் நெஸ்வாடியா பாலியல் தொந்தரவு செய்ததாக நடிகை பிரீத்தி ஜிந்தா போலீசில் புகார் செய்தார்.

இதுகுறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் வெளிநாட்டில் இருந்து திரும்பிய பிரீத்தி ஜிந்தா நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார்.

பலர் முன்னிலையில் நெஸ்வாடியா தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், 3 முறை அத்துமீறி பாலியல் தொந்தரவு செய்ததாகவும் அவர் கூறினார். 14 சாட்சிகளின் பெயர்களையும் போலீசாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து உண்மையை கண்டறிய போலீசார் முடிவு செய்தனர். அதன்படி மே 30-ந்தேதி மைதானத்தில் நடந்த சம்பவம் பற்றிய கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.

மைதானத்தின் உள்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கேமராக்கள் 172 முறை சுழன்று காட்சிகளையும் பதிவு செய்துள்ளன. 5 கண்காணிப்பு கேமராக்கள் பிரீத்தி ஜிந்தா அமர்ந்து இருந்த பகுதியில் இருந்தன. அனைத்து கேமராக்களில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன.

பதிவான காட்சிகள் அனைத்தையும் போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் அதில் பிரீத்தி ஜிந்தாவின் குற்றச்சாட்டுக்கான எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை.

இருந்தாலும் பிரீத்தி ஜிந்தா குறிப்பிட்டுள்ள சாட்சிகளுள் ஒருவரான ஜெய் கனோஜியா அளித்துள்ள வாக்கு மூலத்தில், 'குறிப்பிட்ட நாளில் ப்ரித்தி ஜிந்தாவின் கையைப் பிடித்கு நெஸ் வாடியா இழுத்ததைப் பார்த்தேன். இதனால் அவர் கை மற்றும் தோளில் காயமும் வீக்கமும் இருந்ததைப் பார்த்தேன். ஆனால் அவர்களுக்குள் நடந்த வாக்குவாதத்தை கேட்க முடியவில்லை,' என்றும் கூறியுள்ளார்.

மற்ற சாட்சிகளையும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர் போலீசார்.

 

Post a Comment