பிஆர்ஓ யூனியன் தேர்தல்.. தலைவராக விஜயமுரளி, பொதுச் செயலராக பெருதுளசி தேர்வு

|

சினிமா பிஆர்ஓ யூனியன் தேர்தலில் தலைவராக விஜயமுரளியும், பொதுச் செயலராக பெருதுளசி பழனிவேலும் தேர்வு செய்யப்பட்டனர்.

தென்னிந்திய சினிமா பிஆர்ஓக்கள் யூனியனின் தேர்தல் நேற்று நடந்தது.

இதில் தலைவராக விஜயமுரளி ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல பொருளாளர் பதவிக்கு மௌனம் ரவி தேர்வு செய்யப்பட்டார்.

பிஆர்ஓ யூனியன் தேர்தல்.. தலைவராக விஜயமுரளி, பொதுச் செயலராக பெருதுளசி தேர்வு

9 செயற்குழு உறுப்பினர்களாக நிகில் முருகன், வி.எம்.ஆறுமுகம், இனியன் ராஜன், மேஜர்தாசன், கிளாமர் சத்யா, ரியாஸ் கே.அகமது, துரைப்பாண்டி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பெரு.துளசிபழனிவேல் செயலாளராகவும், கோவிந்தராஜ், என்.சங்கரலிங்கம் இருவரும் துணைத் தலைவர்களாகவும், கணேஷ்குமார் மற்றும் வெங்கட் இருவரும் இணைச்செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட தகவலை தென்னிந்திய திரைப்படப் பத்திரிகை தொடர்பாளர் யூனியன் சங்கத்தினர் அறிக்கையை வெளியுட்டுள்ளனர்.

 

Post a Comment