சிவப்பு படத்தை வெளியிடுகிறார் ராஜ்கிரண்!

|

சென்னை: சிவப்பு படத்தை தனது பேனரில் வெளியிடுகிறார் நடிகரும் இயக்குநருமான ராஜ்கிரண்.

எண்பதுகளிலும் தொன்னூறுகளிலும் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் முன்னணியில் இருந்தவர் ராஜ்கிரண். அவரது என் ராசாவின் மனசுல, அரண்மனைக் கிளி, எல்லாமே என் ராசாதான் போன்ற படங்கள் வசூலில் சாதனைப் படைத்தவை.

ரெட்சன் ஆர்ட் கிரியேஷன்ஸ் மூலம் தயாரிப்பு மற்றும் விநியோகத்தை கவனித்து வந்தவர், பின்னர் மாயி கிரியேட்டர்ஸ் என்ற பெயரிலும் தயாரித்தார்.

சிவப்பு படத்தை வெளியிடுகிறார் ராஜ்கிரண்!

பின்னர் பத்தாண்டு காலத்துக்கும் மேல் படங்கள் தயாரிப்பதை நிறுத்தி வைத்தார். நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் சிவப்பு என்ற படத்தை விநியோகிக்க முடிவு செய்துள்ளார்.

புன்னகைப் பூ கீதாவின் எஸ்.ஜி.பிலிம்ஸ், முக்தா ஆர். கோவிந்தின் முக்தா எண்டர்டைன்மென்ட் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'சிவப்பு'.

நவீன்சந்திரா - ரூபா மஞ்சரி, ராஜ்கிரண் நடித்து கழுகு சத்யசிவா இயக்கியுள்ள இப்படத்தை ராஜ்கிரண் பார்த்து பரவசமாகிவிட்டாராம்.

மஞ்சப்பை படம் தனக்கு மிகப்பெரிய அந்தஸ்தை ஏற்படுத்தி கொடுத்தது மாதிரி சிவப்பு படமும் மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று நம்புகிறார் ராஜ்கிரண்.

இலங்கை அகதிகளின் வாழ்க்கைப் பதிவாக உருவாகி உள்ள சிவப்பு படத்தை ராஜ்கிரணே வாங்கி தன் பேனரில் திரையிட பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

 

Post a Comment