சர்ச்சை கிளம்ப வேண்டும் என்பதற்காகவே சமூக வலைத் தளத்தில் கருத்துப் பதிவு செய்பவர் ராம் கோபால் வர்மா.
சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் தளத்தில், 'ரஜினியிடம் எனக்கு பிடித்ததே அவரது மார்புதான். அதை ஏன் அவர் அனிமேஷனில் விரிவடைய அனுமதித்தார்' என்று கமெண்ட் போட்டு, ரஜினி ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்.
இந்த நிலையில் ராம்கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள இன்னொரு பதிவு அடுத்த சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.
அதில் 'சோனியாவின் மகளைவிட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மகள்தான் கவர்ச்சியானவர்,' என்று எழுதியுள்ளார்.
மேலும் பிரதமர் மோடி பதவியேற்பு விழா ஒரு அரசியல் விழாவா அல்லது சினிமா விழாவா என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு அரசியல்வாதிகளை விட சினிமாக்காரர்கள் அதிகம் இடம்பெற்றிருந்தார்கள் என்று கேலி செய்திருக்கும் அவர், மோடி பதவி ஏற்பையொட்டி இலங்கை, பாகிஸ்தான் சிறைகளிலிருந்து இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பதையும் கிண்டலடித்துள்ளார் அவர்.
Post a Comment