தெலுங்கில் ஒரு படத்தை இயக்குகிறார் முன்னாள் கவர்ச்சி நடிகை ஷகிலா என்பது பழைய செய்தி.
அது என்ன மாதிரியான படம் என்று விசாரித்தால்... கிட்டத்தட்ட அவர் முன்பெல்லாம் மலையாளத்தில் நடித்தாரே அந்த மாதிரி பி கிரேடு கதைதான் என்பது தெரிய வந்தது.
அந்தப் படத்துக்காக கொஞ்சம் தனது சொந்தக் கதையையும் சேர்த்து திரைக்கதை தயார் செய்திருக்கிறாராம்.
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என்ற பெயரில், பாலியல் சமாச்சாரங்களையே பிரதானமாக இந்தக் கதையில் எடுக்கப் போகிறாராம்.
"இன்றைக்கு பெண்களுக்கு எதிராக அதிகம் நடப்பது செக்ஸ் வன்முறைகள்தான். அதனால் அத்தகைய சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படத்தை எடுக்கிறேன். இப்படிப்பட்ட கொடுமைகளைத் தட்டிக் கேட்கும் ஒரு பெண்தான் இந்தப் படத்தின் நாயகி," என்று அவர் ஒப்புதல் வாக்குமூலமும் தந்துள்ளார்.
மேலும், "சினிமா நடிகை ஆன பிறகுதான், படம் இயக்குவதில் ஆர்வம் பெருகிறது. என் நீண்ட நாள் கனவு இதன் மூலம் நிறைவேறிவிட்டது," என்றார்.
Post a Comment