இதான் அஜீத் - கவுதம் மேனன் படத்தின் கதையாமே!

|

அஜீத் நடிக்க கவுதம் மேனன் இயக்கும் படத்தின் கதை இணைய தளத்தில் கசிந்துவிட்டதாக தகவல் கசிந்துள்ளது.

அந்தக் கதை:

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் சென்று கொண்டிருக்கும் அஜீத் மனைவி த்ரிஷாவை ரவுடிகள் வழிமறித்து கொன்றுவிடுகிறார்களாம். பிணத்தை சாலையிலேயே போட்டுவிட்டு ஓடிவிட, அந்தக் கொலை தமிழகத்தையே பரபரப்பாக்குகிறது.

இதான் அஜீத் - கவுதம் மேனன் படத்தின் கதையாமே!

கொலையாளிகளை கண்டு பிடிக்கும் பொறுப்பு காவல் துறை உயர் அதிகாரி அஜீத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. அவருக்கு அனுஷ்கா உதவி செய்கிறார்.

இந்தக் கொலையின் பின்னணியில் பெரும் சதி இருப்பதும், பெரிய மனிதர்கள் பலர் இருப்பதும் தெரிய வருகிறது. எந்த நெருக்கடிக்கும் தலைவணங்காமல், அந்தப் பெரிய மனிதர்களை கூண்டிலேற்றுகிறாராம் அஜீத்.

-இதுதான் படத்தின் கதை என்கிறார்கள். விஷயம் தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்களாம் படக்குழுவினர். வெளியிட்டது யார் என்ற விசாரணையும் நடந்து வருகிறதாம்.

 

Post a Comment