ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்தார் அபிராமி

|

ஆறு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார் நடிகை அபிராமி.

திவ்யா கோபிகுமார் என்ற பெயரில் மலையாளத்தில் நடிக்க ஆரம்பித்த அபிராமி, தமிழில் 2000-ல் வானவில் படம் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து தோஸ்த், சமுத்திரம், சமஸ்தானம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்தார் அபிராமி

கடைசியாக கமலுடன் விருமாண்டி படத்தில் நடித்தார். 2004-ல் இப்படம் வந்தது. தொடர்ந்து சில படங்களில் நடித்து விட்டு சினிமாவை விட்டு ஒதுங்கி அமெரிக்காவில் குடியேறினார் அபிராமி.

ஆறு வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். கேரளாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியான குட்டியம்மா வாழ்க்கை மலையாளத்தில் படமாகிறது.

இதில் குட்டியம்மா வேடத்தில் போலீஸ் அதிகாரியாக அபிராமி நடிக்கிறார். இதைத் தொடர்ந்து கமல் ஹாஸன் நடிக்கும் உத்தம வில்லன் படத்தில் டப்பிங் பேசியுள்ளார். அடுத்து கமலுக்கு ஜோடியாக த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

 

Post a Comment