நேற்றைக்கு மழை பெய்யும்... அடுத்த படம் அறிவித்தார் பாரதிராஜா!

|

சென்னை: ‘அன்னக்கொடி' படத்திற்கு பிறகு தான் இயக்கும் புதிய படத்தை அறிவித்துள்ளார் இயக்குனர் பாரதிராஜா.

இப்படத்திற்கு ‘நேற்றைக்கு மழை பெய்யும்' என்று தலைப்பு வைத்துள்ளார்.

இந்தப் படத்தின் கதையை இயக்குனர் அகத்தியன் எழுதியுள்ளார்.

நேற்றைக்கு மழை பெய்யும்... அடுத்த படம் அறிவித்தார் பாரதிராஜா!

இப்படத்தின் கதாநாயகனாக இயக்குனர் சேரன் நடிக்கிறார். கதநாயாகியை இன்னும் பாரதிராஜா முடிவு செய்யவில்லை.

இப்படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் பாரதிராஜா தீவிரமாக உள்ளார்.

காதல்தான் படத்தின் மையக்கரு. ஆகஸ்ட் 3-ந் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது.

மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பை இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிடுகிறார் பாரதிராஜா.

பாரதிராஜா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் அன்னக்கொடி. இந்தப் படம் சரியாகப் போகவில்லை. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து 3 படங்களை இயக்கப் போவதாக பாரதிராஜா அறிவித்திருந்தார். அதில் முதல் படம்தான் இந்த நேற்றைக்கு மழை பெய்யும்!

 

Post a Comment