கதை திரைக்கதை வசனம் இயக்கம் தள்ளிப் போனது!

|

ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாவதாக இருந்த ஆர் பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படம் தள்ளிப் போய்விட்டது. அந்தத் தேதியில் சில பெரிய படங்கள் வரவிருப்பதால் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப் போகிறார்களாம்.

வித்தகன் படத்துக்குப் பிறகு பார்த்திபன் இயக்கியுள்ள படம் கதை திரைக்கதை வசனம் இயக்கம். இந்தப் படத்தில் அவர் நடிக்கவில்லை. இயக்குநர் பொறுப்போடு நிறுத்திக் கொண்டார்.

ஆனால் ஆர்யா, அமலா பால், சினேகா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் இந்தப் படத்தில்.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் தள்ளிப் போனது!

இந்தப் படத்தை பார்த்திபன் மிக முக்கியப் படைப்பாகக் கருதுவதால், அனைத்து ரசிகர்களும் பார்க்கும் வகையில் படத்தை வெளியிட வேண்டும் என முயற்சித்து வருகிறார்.

படத்தை வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி அதிக திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அன்றைய தேதியில் ஜிகிர்தண்டா, சரபம், சண்டியர் போன்ற படங்கள் வெளியாகின்றன.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் தள்ளிப் போனது!  

இத்தனை படங்களுக்கு மத்தியில் தன் படத்தை வெளியிட்டால், திரையரங்குகள் கிடைப்பது கடினம், சரியாக மக்களைப் போய்ச் சேர்வதும் சந்தேகம் என்பதை உணர்ந்ததால், கதை திரைக்கதை வசனம் இயக்கத்தை வேறு தேதிக்கு மாற்ற பார்த்திபன் முடிவு செய்துள்ளார்.

புதிய ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்கப் போகிறாராம் பார்த்திபன்.

 

Post a Comment