சென்னை: மலையாளத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் சக்கைப்போடு போட்ட திரைப்படமான திரிஷ்யம்தான் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் படமாகின்றது.
இப்படத்தில் மோகன்லால் கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசனும், மீனா கதாப்பாத்திரத்தில் கெளதமியும் நடிக்கின்றனர்.
தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கும் பெண் காவல் அதிகாரி ஒருவரின் மகனை மீனா அடித்துக் கொலை செய்து விடுவார். பின்னர் தன்னுடைய மகளுடன் இணைந்து அப்பிணத்தை தோட்டத்தில் புதைத்து விடுவார்.
இதனை அறியும் மோகன்லால் தன்னுடைய மனைவியிம், மகளும் போலீசில் சிக்கிவிடாமல் காப்பாற்ற போராடுவதே இப்படத்தின் கதையாகும்.
அம்மகள் கதாபாத்திரத்தில் தமிழில் நடிப்பதற்கு ஜில்லா, நவீன சரஸ்வதி சபதம் படங்களில் நடித்த நிவேதிதா தாமஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. மலையாளத்தில் இந்த கேரக்டரில் அன்சிபா நடித்து இருந்தார்.
பெண் போலீஸ் அதிகாரி வேடத்தில் மலையாளத்தில் நடித்த ஆஷா சரத்தே தேர்வாகியுள்ளார். வில்லன் வேடத்தில் கலாபவன்மணி நடிக்க இருக்கின்றார்.
தமிழிலும் ஜீது ஜோசப்பே இயக்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment