ஆபத்தான இந்தோ - திபெத் எல்லையில் அஜீத் படப்பிடிப்பு

|

அஜீத்தை வைத்து கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை மிக ஆபத்தான இந்தோ - திபெத் எல்லையில் படமாக்குகின்றனர். இதற்காக மத்திய அரசின் அனுமதிக்கு காத்திருக்கிறது படக்குழு.

தல 55 என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக சென்னையில் நடந்தது.

ஆபத்தான இந்தோ - திபெத் எல்லையில் அஜீத் படப்பிடிப்பு

ஆபத்தான பகுதி

இப்பொழுது அடுத்தக்கட்ட படப்பிடிப்பை இந்தோ-திபெத் எல்லையில் படமாக்கவுள்ளார்கள். இந்தோ-திபெத் எல்லை மிகவும் அபாயகராமான ஒரு பகுதியாகும். இங்கு படப்பிடிப்பு நடத்துவதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதல் பெறவேண்டும்.

காத்திருப்பு

தற்போது, மத்திய அரசின் ஒப்புதலுக்காக படக்குழுவினர் காத்திருக்கின்றனர். அவர்கள் ஒப்புதல் கொடுக்கும் பட்சத்தில் இந்தோ-திபெத்திய எல்லை போலீசாரின் உதவியுடன் படப்பிடிப்பைத் தொடங்குவார்கள்.

முறுக்கு மீசை

போலீஸ் கதையான இதில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா, த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். அஜீத் இப்படத்தில் மிகவும் இளமையான தோற்றத்துடன், முறுக்கு மீசை, நரையில்லா தலையுடன் நடிக்கிறார்.

இப்படத்தின் புகைப் படங்கள் ஏற்கெனவே வெளியாகிருந்த நிலையில், அஜீத்-த்ரிஷா சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் நேற்று வெளியாகின. இணையதளத்தில் இந்தப் படங்களுக்கு ஏக வரவேற்பு. கொண்டாடிவிட்டார்கள் அவரது ரசிகர்கள்.

 

Post a Comment