நடிகர் சென்ராயன் தன் காதலியை வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி திருமணம் செய்கிறார்.
தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் பைக் திருடனாக அறிமுகமானவர் வில்லன் நடிகர் சென்ராயன். அதைத் தொடர்ந்து சிலம்பாட்டம், ஆடுகளம், மூடர்கூடம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
ஜீவா நடித்த ரௌத்திரம் படத்தில் பிரதான வில்லனாக நடித்து பலராலும் பாராட்டப்பட்டவர் சென்ராயன்.
இவர் பட்டதாரி பெண்ணான கயல்விழி என்பவரை காதலித்து வந்தார். இந்தக் காதலுக்கு பெரிய எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் இரு வீட்டாரையும் சமாதானப்படுத்திய சென்ராயன் இம்மாதம் 31 ம் தேதி திருமணம் செய்துகொள்கிறார்.
வத்தலகுண்டு பகுதியில் உள்ள சென்ராயப் பெருமாள் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
இந்த திருமணத்தில் கலையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொள்கிறார்கள்.
Post a Comment