ஈகோ திரைப்படத்தின் இயக்குநர் மீது தயாரிப்பாளர் மோசடி புகார் கொடுத்துள்ளதால், இயக்குநரைத் தேடுகிறது போலீஸ்.
சில மாதங்களுக்கு முன்பு வெளியான படம் 'ஈகோ'. இப்படத்தின் எஃப் எம். எஸ்- ஓவர்சீஸ் உரிமை அதாவது வெளிநாடுகளில் திரையிடும் உரிமையை எஃப் சி எஸ் கிரியேஷன்ஸ் வாங்கியிருந்தது.
முதலில் உரிமை பெற்ற வேந்தர் மூவிஸ் நிறுவனத்திலிருந்து விநாயகம் என்பவர் உரிமை வாங்கியிருந்தார். அவரிடமிருந்து சங்கர நாராயணன் என்பவர் வாங்கியிருந்தார். அவரிடமிருந்து வீரசேகரன், கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, பாக்கணும்போல இருக்கு, தொட்டால் தொடரும் ஆகிய படங்களின் தயாரிப்பு நிறுவனமான எஃப் சி எஸ் கிரியேசன்ஸ் ஓவர்சீஸ் உரிமையைப் பெற்றிருந்தார்
மலேசியாவில் படத்தை வெளியிட மலேசியாவின் ஆஸ்ட்ரோ டிவியை எஃப் சி எ ஸ் சார்பில் அணுகியிருக்கின்றனர். அதே நேரத்தில் இன்னொருவரும் தங்களிடம் 'ஈகோ' பட உரிமை இருப்பதாக வந்திருக்கிறார். எது அதிகாரப்பூர்வமானது என குழம்பிய டிவி நிர்வாகம் விவரம் கேட்டுள்ளது.
தாங்கள் உரிமை பெற்றுள்ளதாகக் கூறிய அந்த நபர் படத்தின் இயக்குநர் சக்திவேல் கொடுத்ததாக ஒரு கடிதத்தை மட்டுமே காட்டியிருக்கிறார். அது ஒரு சாதாரண லெட்டர் பேட் கடிதம். அதில் தயாரிப்பாளர் கையெழுத்து மட்டுமே இருந்தது. எவ்வித சட்டப்பூர்வ நடை முறைகளும் பின்பற்றப்படவில்லை. சக்திவேலை போன் மூலமும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தயாரிப்பாளரும் கிடைக்கவில்லை.
வேந்தர் மூவிஸில் கேட்ட போது நாங்கள் சட்டப்பூர்வமாகவே முறைப்படியே முதலில் விநாயகம் என்பவரிடம் கொடுத்துள்ளோம் என்றார்கள்.
பொறுத்துப் பார்த்த சேதுராமன் போலீசுக்குப் போய்விட்டார். மோசடி, ஏமாற்றுதல் போன்ற குற்றங்களுக்காக ஆர்.5 விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப் பட்டுள்ளது.
நீதி மன்ற வழிகாட்டுதலின் படி முதல் தகவல் அறிக்கை ஆர்.5 விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீசார் தலைமறைவாக இருக்கும் இயக்குநர் சக்திவேலைத் தேடி வருகிறார்கள்.
Post a Comment