சென்னை: ஒரு வருடம் இடைவிடாமல் ஷூட்டிங்கில் பங்கேற்ற யோகா நடிகை தற்போது சூட்டிங்கிற்கு லீவ் போட்டுவிட்டு யாருக்கும் சொல்லாமல் தனது ரகசிய காதலனுடன் டூர் போயிருக்கிறாராம்.
சூப்பர் நடிகருடனும், தல நடிகருடனும் தமிழில் நடித்து வருகிறார் யோகா நடிகை. அது மட்டுமல்லாது தெலுங்கு படங்களுக்காக கிலோ கணக்கில் நகையைப் போட்டு நடித்த யோகா நடிகை அதிகம் சோர்வடைந்து விட்டாராம்.
கடந்த ஒரு வருடமாக இடைவிடாமல் ஷூட்டிங்கில் பங்கேற்றது, வாள் சண்டை, குதிரை ஏற்ற பயிற்சிகளும் பெற்றது அயர்ச்சியை ஏற்படுத்திவிட்டதாம். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்ததால் சென்னைக்கும் ஹைதராபாத்துக்கும் மாறி மாறி பறந்துகொண்டிருந்தது வேறு மேலும் டென்ஷனை அதிகரித்துவிட்டதாம்.
தற்போது தனது பணிகளை பெரும்பகுதி முடித்துவிட்ட யோகா நடிகை வெளிநாடு சென்று ஓய்வு எடுக்க முடிவு செய்தார். இதையடுத்து குடும்பத்தினரிடம் மட்டும் தான் எங்கு செல்கிறேன் என்பதை தெரிவித்தார். மற்றவர்களிடம் டூர் செல்வதாக மட்டும் கூறிவிட்டு பறந்து விட்டாராம்.
யோகா நடிகையுடன் அவரது ரகசிய காதலனும் அவருடன் சென்றுள்ளார். 10 நாட்கள் ஓய்வுக்கு பிறகு அவர் திரும்பி வந்து மீண்டும் ஷூட்டிங்கில் பங்கேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment