சென்னை: கத்தி படத்தில் விஜய் இளம் அரசியல் போராளியாக வருகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வரும் கத்தி படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. படத்தை தயாரிக்கும் லைக்கா மொபைல்ஸ் நிறுவனர் சுபாஸ்கரன் அல்லிராஜா இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இதனால் தான் படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்று சிலரும், அதில் என்ன கூறுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளாமல் ஏன் எதிர்க்க வேண்டும் என்று சிலரும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் கத்தி படத்தில் வரும் கதிரேசன் என்ற கதாபாத்திரம் அதாவது இரண்டில் ஒரு விஜய் இளம் அரசியல் போராளியாம். அவர் இளைஞர் படையை வழிநடத்துபவராக வருகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
கத்தி படம் பிரச்சனைகள் எல்லாவற்றையும் மீறி ரிலீஸாகி நிச்சயம் வெற்றி பெறும் என்று விஜய்யின் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். படத்தில் அனிருத் இசையில் விஜய் ஸ்ருதியுடன் டூயட் பாடுகிறார்.
கத்தி படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment