உசிலம்பட்டியை மையப்படுத்தி எடுக்கப்படும் 'போர் குதிரை'!

|

உசிலம்பட்டி... மதுரை மாவட்டத்தின் சிறப்பு மிக்க பகுதி. மதுரை மீது அபார பாசம் கொண்ட மக்கள் வாழும் பகுதி.

இந்த ஊரை மையப்படுத்தி ஒரு படம் உருவாகிறது. படத்துக்கு தலைப்பு போர்க்குதிரை.

மண்ணின் மணம் சார்ந்த படங்களுக்கு என்றுமே ஒரு அபரிதமான வரவேற்பு உத்திரவாதம் என்ற நம்பிக்கையுடன் மெயின் ஸ்ட்ரீம் பிக்சர்ஸ் என்னும் புதிய பட நிறுவனம் 'போர் குதிரையை' உருவாக்குகிறது.

இதுகுறித்து படத்தின் இயக்குநர் பிரவீண் பேசுகையில், 'மதுரையை அடுத்துள்ள உசிலம்பட்டியின் கலாசாரத்தைச் சுற்றி பின்னப்பட்ட கதை இது.

இந்த மண்ணின் மணத்துக்கும், குணத்துக்கும் ஒரு தனித்துவம் உண்டு. என்னுடைய கதை அந்த மண்ணின் மைந்தர்களின் பழக்கங்களையும் உணர்வுகளையும் படம் பிடித்து காட்டும். இவர்களுக்கென இருக்கும் ஒரு உத்வேகமான போர்குணமே 'போர் குதிரை' படத்துக்கு அடித்தளம்,' என்றார்.

இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் இருக்கிறது இந்த போர்க் குதிரை.

 

Post a Comment