லிங்கா படப்பிடிப்பை ரத்து செய்து 'ரீல்'களை பறிமுதல் செய்யணும்: கர்நாடக முதல்வரிடம் புகார்

|

ஷிமோகா: ஷிமோகாவில் உள்ள லிங்கனமக்கி அணை அருகே லிங்கா படப்பிடிப்பை நடத்த கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ரஜினிகாந்த் நடித்து வரும் லிங்கா படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு ஷிமோகா மாவட்டத்தில் உள்ள

லிங்கா படப்பிடிப்பை ரத்து செய்து 'ரீல்'களை பறிமுதல் செய்யணும்: கர்நாடக முதல்வரிடம் புகார்

லிங்கனமக்கி அணை அருகே நடந்து வருகிறது. நாட்டின் முக்கிய நீர்மின் உற்பத்தி மையமான அந்த அணை அருகே படப்பிடிப்பை நடத்தக் கூடாது என்றும், அதை உடனே

ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சித்தராமையாவுக்கு அனுப்பப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,

ஆசியா கண்டத்திலேயே மிக குறைந்த செலவில் நீர்மின் உற்பத்தி செய்யும் பெருமை லிங்கனமக்கி அணைக்கு உள்ளது. இந்த அணையின் மீது இப்போது அனைவரின்

பார்வையும் பதிந்துள்ளது.

இந்த அணையின் சுற்றுப்பகுதிகளில் பொது மக்கள், சுற்றுலாப் பயணிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடை செய்யப்பட்ட இடத்தில் ரஜினிகாந்த்

நடிக்கும் "லிங்கா' திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு அரசு அனுமதி அளித்திருப்பது விவேகமற்ற செயலாகும்.

மாநில அரசு உடனடியாக லிங்கனமக்கி அணை அருகில் நடந்து கொண்டிருக்கும் படப்பிடிப்பை ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே, அந்த இடத்தில் நடந்துள்ள படப்பிடிப்பின்

ரீல்களை வசப்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Post a Comment