தனக்கு திருமணம் நடந்ததாக வந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகை பாவனா.
தமிழில் வெயில், தீபாவளி, அசல் போன்ற படங்களில் நடித்தவர் பாவனா. தெலுங்கிலும் நடித்துள்ளார். பின்னர் சொந்த ஊரான கேரளாவுக்குப் போய் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.
இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து விட்டதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் இந்த செய்தியை முற்றாக மறுத்துள்ளார் பாவனா. இது குறித்து அவர் கூறுகையில், "அடுத்த வருடம் ஜனவரியில் எனது சகோதரருக்குத்தான் திருமணம் நடைபெற இருக்கிறது. எனக்கு இல்லை. எனக்கு திருமணம் ஆகி விட்டது என்று பலரும் தவறாக நினைத்துக் கொண்டுள்ளனர்," என்றார்..
சமீபத்தில், கன்னட பட இயக்குநர் ஒருவர் புதுப்படத்துக்கு ஒப்பந்தம் செய்ய நடிகை பாவனாவை தொலைபேசியில் அழைத்துள்ளார். அடுத்த இரு தினங்கள் கழித்து, 'உங்களுக்கு திருமணம் ஆகிடுச்சாமே... அப்ப நடிக்க மாட்டீங்கதானே," என்று கேட்டுள்ளார்.
என்னடா இது.. பொழப்பைக் கெடுத்துடுவாங்க போலிருக்கே.. என்று அலறியடித்துக் கொண்டு இந்த மறுப்புச் செய்தியை வெளியிட்டுள்ளார் பாவனா.
Post a Comment