ஆஸ்கர் விருதுபெற்ற ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகர் கமல் ஹாஸன்.
ராபின் வில்லியம்ஸ் மரணம் குறித்து கமல் ஹாஸன் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:
நகைச்சுவை நடிகர்கள்தான் இந்த சமூகத்தின் மிகச் சிறந்த விமர்சகர்கள். தங்கள் கோபத்தை நகைச்சுவை எனும் முகமூடிக்குள் மறைத்துக் கொண்டவர்கள். தொடர்ந்து அப்படி கோபத்தை அடக்குவதாலேயே மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.
மிக எளிதில் கண்ணீர் சிந்தும் இயல்புடையவர் ராபின் வில்லியம்ஸ். அதை அவரது படங்களில் பார்க்கலாம். அமெரிக்க ஹீரோக்களுக்கு திரையில் கதறி அழும் காட்சிகளே பிடிக்காது. அமெரிக்கர்களின் மனநிலையை மாற்றியது வியட்நாம் போர்.
வேதனை, பயத்தில் திரையில் கதறியழுது காட்டியவர் ராம்போ எனும் ஆக்ஷன் ஹீரோதான்.
ஆண்களின் அழுகைக்கு கண்ணியம் தேடித் தந்தவர் ராபின் வில்லியம்ஸ். அவரது திறமைக்காக அவரை எனக்குப் பிடிக்கும்.
செய்திகளில் வருவதுபோல, அவர் உண்மையில் தற்கொலை செய்து கொண்டிருந்தால், தனது முடிவு தேதிக்கு முன்பே வாழ்க்கையை முடித்துக் கொண்ட அவரை வெறுக்கிறேன். அவரைப் போன்ற திறமையானவர்களிடம் நான் இந்த முடிவை எதிர்ப்பார்க்கவில்லை. இது எனது சக இந்திய ஹீரோ குருதத்துக்கும் பொருந்தும்!
-இவ்வாறு கமல் ஹாஸன் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment