சென்னை: இனி பெரிய ஹீரோவின் படமாகவே இருந்தாலும் தனது கதாபாத்திரம் வெயிட்டாக இருந்தால் மட்டுமே நடிக்கப் போவதாக ஜல் நடிகை தெரிவித்துள்ளார்.
தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வருகிறார் பெரிய கண்களை கொண்ட ஜல் நடிகை. தெலுங்கில் அம்மணிக்கு நல்ல பெயர் உள்ளது. காரணம் ஹீரோக்கள். ஆம், ஹீரோக்கள் படப்பிடிப்புக்கு எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும் பொறுமையாக காத்திருந்து நடித்துக் கொடுப்பார் நடிகை. அதனால் தான் தெலுங்கு ஹீரோக்களின் மனம் கவர்ந்த நாயகியாக உள்ளார்.
இத்தனை நாட்கள் அப்பாவி பெண் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகைக்கு தற்போது தெலுங்கு படம் ஒன்றில் முதன்முறையாக வில்லி கதாபாத்திரம் கிடைத்துள்ளது. இதில் நன்றாக நடித்து பெயர் வாங்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார் நடிகை.
மேலும் இனி எவ்வளவு பெரிய ஹீரோவின் படமாக இருந்தாலும் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்வது என்ற முடிவுக்கு வந்துள்ளார் ஜல் நடிகை.
Post a Comment