திமிரான நாயகனின் இரண்டு படங்களில் தொடர்ந்து நாயகியானார் யானை நடிகை. இதனால் நடிகருக்கும், அம்மணிக்கும் இடையில் ‘இல் தக்க சையா' என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பள்ளிப் படிப்பையே இன்னும் முடிக்காத நாயகியும், தன் உயரத்திற்கு ஏற்ற ஆஜானுபாகுவான நடிகர் இவர் தான் என மேடைகளில் புகழ்ந்து தள்ளினார்.
திடீரென இருவருக்கும் இடையில் என்ன நடந்தது எனத் தெரியவில்லை. தனது அடுத்த படத்தில் உலக நடிகரின் வாரிசை தனக்கு ஜோடியாக்கினார் நடிகர். சரி, அடுத்த படத்திலாவது மீண்டும் நடிகருடன் ஜோடி சேரலாம் என நினைத்திருந்தார் நடிகை.
ஆனால், தனது புதிய படத்திலும் நடிகையை நடிக்க வைக்கும் எண்ணமில்லையாம் நடிகருக்கு. இதனால், லேசாக அப்செட் ஆனார் நடிகை. இது தொடர்பாக பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்பிப் பார்த்தாராம். ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை.
எனவே, தனது வழியை மாற்றிக் கொண்டார் நடிகை. இதனால், சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் விரல் நடிகரைப் புகழ்ந்து தள்ளி விட்டார். நான் பார்த்ததிலேயே இப்படி ஒரு நடிகரைப் பார்த்ததில்லை. எவ்வளவு அழகாக நட்பாக பழகுகிறார் என இமயமலை ரேஞ்சுக்கு ஐஸ் மழை பொழிந்துள்ளார்.
பார்ப்போம்... நடிகை கஷ்டப்பட்டு பேசியதற்கு கை மேல் பலன் கிடைக்கிறதா என்று.
Post a Comment