சென்னை: மன்மதனின் காதலியாக வலம் வந்து கொண்டிருந்த வரை சின்னப்பூ நடிகையை மற்ற நடிகர்கள் எட்டி நின்றே பேசி வந்தனர். ஆனால், சிலப்பல காரணங்களுக்காக அந்தக் காதல் பாதியிலேயே முறிந்து போனது. இதனால் மற்ற நடிகர்களுக்கு மிகவும் ஜாலியாகி விட்டது.
ஆனால். இந்த நிலை நீண்டகாலம் நீடிக்கவில்லை. இப்போது நடிகையின் நிலைமையே தலைகீழ் என்கிறார்கள் அவரது நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள். நடிகை தற்போது தெலுக்கு நடிகர் ஒருவரின் வசம் சிக்கியுள்ளாராம்.
இதனால், மீண்டும் பாதுகாப்பு வேலிக்குள் வந்து விட்டாராம் நடிகை. நினைத்த நேரத்தில் மற்ற நடிகர்களால் நடிகையை தொடர்பு கொள்ள இயலுவதில்லையாம். நடிகரைத் தாண்டி புதிய படத்திற்காக நடிகையை அணுகுவதற்குள் தலை சுற்றி விடுகிறதாம்.
ஆனால் மன்மதன் நடிகரின் கட்டுப்பாட்டில் நடிகை இருந்த போது பல கண்டிசன்களைப் போட்ட தாய்க்குலம் இப்போது எப்படி அமைதியாக இருக்கிறார் என்பது தான் (தொடர்பு கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும்) பல நடிகர்களின் முக்கியக் கேள்வியே.!
Post a Comment