திமிரு பட வில்லி ஸ்ரேயா ரெட்டியை நினைவிருக்கிறதா... அந்தப் படத்துக்குப் பிறகு, விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
கணவருடன் தயாரிப்பு வேலைகளில் கொஞ்ச காலம் கவனம் செலுத்தினார். விஷால் நடித்த தோரணை, வெடி ஆகிய படங்களுக்கு இவர்தான் இணை தயாரிப்பாளர். ஆனால் விஷால் தனியாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய பிறகு அந்த வேலையும் இல்லாமல் போனது.
ஐந்தாண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வரும் ஸ்ரேயா ரெட்டிக்கு கிடைத்துள்ள முதல் படம் அண்டாவ காணோம். இயக்குபவர் புது இயக்குநர் வேல். இந்தப் படத்தின் கதையைக் கேட்ட உடனே நடிக்க ஒப்புக் கொண்டாராம் ஸ்ரேயா.
"சுசீந்திரனின் முன்னாள் உதவியாளர் வேலு என்னிடம் வந்து அண்டாவ காணோம் கதையைச் சொன்னார். எனக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. முழுக்க முழுக்க திறமையைக் காட்ட வேண்டிய பாத்திரம். உடனே ஒப்புக் கொண்டேன். எனது மறுபிரவேசத்தை அழுத்தமாக பதிவு செய்யும் இந்தப் படம்," என்கிறார் ஸ்ரேயா ரெட்டி.
நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் போன்ற தலைப்புகளில் படமெடுத்த லியோ விஷன்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறது.
Post a Comment