அஜீத் - கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பெயரை நாளை அறிவிக்கப் போவதாக அஜீத்தின் பிஆர்ஓ அறிவித்துள்ளார்.
அஜீத், த்ரிஷா, அனுஷ்கா உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் புதிய படத்தின் தலைப்பை எப்போதோ முடிவு செய்துவிட்டாலும், அதை அறிவிப்பேனா என்று இழுத்தடித்து வந்தனர்.
தீபாவளிக்கு தலைப்பை அறிவிக்கப் போவதாகச் சொன்னவர்கள், அந்த நாளில் அமைதியாக இருந்துவிட்டனர்.
இப்போது படத்தின் தலைப்பை நாளை அறிவிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இந்தப் படத்துக்கு சத்யா, ஆயிரம் தோட்டாக்கள் என பல தலைப்புகள் மீடியாவில் உலா வந்தன.
உண்மையான தலைப்பு என்னவென்பது நாளை தெரிந்துவிடும். தமிழ் சினிமாவைப் பொருத்தவரை, ஒரு தலைப்புக்காக இவ்வளவு பில்ட் அப் கொடுக்க ஆரம்பித்தது அஜீத் படங்களுக்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment