விஜய் - ஏ ஆர் முருகதாஸின் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படமான கத்தியின் தெலுங்கு உரிமை பெரும் விலைக்கு கைமாறியுள்ளது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தாகூர் மது இந்தப் படத்தை வாங்கியுள்ளார்.
தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பின் இசை சில தினங்களுக்கு முன் பெரும் பரபரப்புக்கிடையில் வெளியானது. அடுத்து இதன் தெலுங்கு இசையை வரும் அக்டோபர் 12-ம் தேதி ஹைதராபாதில் வெளியிடுகின்றனர். இசையமைப்பாளர் அனிருது, நடிகர் விஜய், சமந்தா உள்ளிட்டோர் இதில் பங்கேற்க உள்ளனர்.
ஏ ஆர் முருகதாஸ் படங்களுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு உண்டு. இவரது ரமணா படம்தான் அங்கு தாகூராக வெளியானது. இவர் இயக்கிய ஸ்டாலின் படம் பெரும் வெற்றி பெற்றது.
சூர்யா நடித்த கஜினி பெரும் வசூலைக் குவித்தது தெலுங்கில். எனவே கத்தியையும் தெலுங்கில் நேரடிப் படம் போலவே வெளியிட முயற்சித்து வருகிறது அந்தப் படத்தைத் தயாரித்துள்ள லைக்கா நிறுவனம்.
Post a Comment