பாலிவுட் நடிகையை படப்பிடிப்புத் தளத்தில் பலாத்காரம் செய்ய முயற்சி!

|

இந்தி நடிகை ரியா கானை படப்பிடிப்பு அரங்கில் இளைஞர் ஒருவர் கற்பழிக்க முயன்ற சம்பவம் வெளியில் தெரிய வந்துள்ளது.

ரியா கான் இந்திப் படங்களில் நடித்து வருகிறார். மும்பையில் ரியா கான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

பாலிவுட் நடிகையை படப்பிடிப்புத் தளத்தில் பலாத்காரம் செய்ய முயற்சி!

இரு தினங்களுக்கு முன் தான் நடிக்க வேண்டிய காட்சிகளை நடித்து முடித்து விட்டு படப்பிடிப்பு அரங்கில் ஓரமாக உட்கார்ந்திருந்தாராம். படக்குழுவினர் வேறு காட்சிகள் எடுப்பதற்காக இன்னொரு இடத்துக்கு சென்று விட்டனர். ரியாகான் மட்டும் தனியாக இருந்தார்.

அப்போது அங்கு வந்த தயாரிப்பு நிர்வாகி, ரியாகான் தனியாக இருப்பதை பார்த்ததும் அவருடன் பேச்சுக் கொடுத்துள்ளார். ஆட்கள் அனைவரும் போகும் வரை பேசிக் கொண்டிருந்தவர், திடீரென ரியா கானின் வாயைப் பொத்தி தூக்கிச் சென்று கற்பழிக்க முயன்றுள்ளார்.

உடனே சுதாரித்துக் கொண்ட ரியாகான் ஆவேசமாக அந்த நபரை அடித்து தள்ளி விட்டு வெளியே ஓடி விட்டார்.

இதுகுறித்து போலீசில் அவர் புகார் செய்யவில்லை. ஆனால் தயாரிப்பாளரிடம் புகார் கூறினார். இதையடுத்து தயாரிப்பு நிர்வாகியை வரவழைத்து கடுமையாக கண்டித்ததோடு, படப்பிடிப்பிலஇருந்து அவரை வெளியேற்றியும் விட்டாராம்.

 

Post a Comment