சென்னை: பழம் பெரும் நடிகரும், மூத்த அரசியல்வாதியுமான எஸ்.எஸ்.ஆர். மறைவை ஒட்டி இன்று அரை நாள் தமிழ்த் திரைப்பட படப்பிடிப்புகள் அரைநாள் ரத்து செய்யப்படுவதாக பெப்சி அறிவித்துள்ளது.
தமிழ்த் திரையுலகில் நடிகராக மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகத் திறமையாளராக விளங்கியவர் எஸ்.எஸ்.ஆர் என அழைக்கப் படும் எஸ்.எஸ்.ராஜேந்திரன். இவர் பழம் பெரும் நடிகராக மட்டுமின்றி, நீண்ட அரசியல் வரலாறு கொண்ட அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர்.
சமீபகாலமாக உடல்நலக் கோளாறால் அவதிப் பட்டு வந்த எஸ்.எஸ்.ஆர். நேற்று சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று அவர் காலமானார். அவருக்கு வயது 86.
பழம் பெரும் நடிகரான எஸ்.எஸ்.ஆர். மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று அரை நாள் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் நடைபெறாது என அறிவிக்கப் பட்டுள்ளது. இத்தகவலை பெப்சி தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.
Post a Comment