ரஜினியின் லிங்கா ஆடியோ உரிமையை வாங்கியது சவுந்தர்யாவின் ஈராஸ் நிறுவனம்!!

|

ரஜினியின் லிங்கா படத்தின் இசை வெளியீட்டு உரிமையை வாங்கியது சவுந்தர்யா தலைமையிலான ஈராஸ் நிறுவனம்.

ரஜினி இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘லிங்கா' படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகிறது.

ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ஆடியோவை நவம்பர் 9-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் ஆடியோ உரிமையை ஈராஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

ரஜினியின் லிங்கா ஆடியோ உரிமையை வாங்கியது சவுந்தர்யாவின் ஈராஸ் நிறுவனம்!!

பாலிவுட்டில் பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரித்த ஈராஸ் நிறுவனம், ‘கோச்சடையான்' படம் மூலம் கோலிவுட்டில் கால்பதித்தது. இந்நிலையில், சமீபத்தில் தென்னிந்தியாவில் தனது கிளையை துவக்கிய ஈராஸ் நிறுவனம், அந்நிறுவனத்தின் தலைவராக ரஜினியின் இளைய மகளும், இயக்குனருமான சவுந்தர்யா ரஜினிகாந்தை நியமித்தது.

இவருடைய முயற்சியால், இந்நிறுவனம் முதன்முதலாக ‘கத்தி' படத்தின் ஆடியோ உரிமையை வாங்கி, அதற்கு மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்தது.

இந்நிலையில், தற்போது ‘லிங்கா' படத்தின் ஆடியோ உரிமையையும் பெற்றுள்ள ஈராஸ் நிறுவனம், இப்படத்தின் ஆடியோவையும் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

‘லிங்கா' படத்தை ராக்லைன் வெங்கடேஷ் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.

 

Post a Comment