பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.... பஞ்சாபி பாடகர் மீது நடிகை பரபரப்பு புகார்

|

சண்டிகர்: பஞ்சாபி பாடகர் ஜெல்லி என்கிற ஜர்னைல் சிங் மற்றும் 3 பேர் மீது 30 வயதான பஞ்சாபி நடிகை ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்னை இந்த நால்வரும் சேர்ந்து கடத்திக் கொண்டு போய், தாக்கி சரமாரியாக பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும் அந்த நடிகை தனது புகாரில் கூறியுள்ளார்.

சண்டிகரில் வசித்து வரும் பஞ்சாபி நடிகையான இவர், போலீசில் அளித்துள்ள புகாரில், ஜெல்லியும் அவரது நண்பர்களும் சேர்ந்து என்னை கடத்திக் கொண்டு சென்றனர்.

பின்னர் என்னை நால்வரும் சேர்ந்து கூட்டாக பலாத்காரம் செய்தனர். இதைச் செய்தனர். பின்னர் இதை வீடியோவில் படமாக்கி வைத்து அதை காட்டி என்னை மிரட்டினர்.

இதை யாரிடமும் சொல்லக் கூடாது. மீறிச் சொன்னால் கடும் விளைவுகளைச்சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டினர். ஆன்லைனில் போட்டு விடுவோம்என்றும் கூறினர். இவர்களின் செயலால் நான் கர்ப்பமும் அடைந்து விட்டேன். இதையடுத்து ஜெல்லியும் அவரது நண்பர்களும் கட்டாயப்படுத்தி அபார்ஷன் செய்து விட்டனர்.

என்னை வயிற்றில் எட்டி உதைத்து சித்திரவதையும் செய்தனர். பின்னர்

அக்டோபர் 17ம் தேதி தங்களது காரியம் முடிந்ததும் மொஹாலியில் உள்ள பேஸ் 1பகுதியில் போட்டு விட்டுச் சென்றனர்.

எனக்கு சுய நினைவு வந்ததும் எனது தோழியை அழைத்து உதவி கோரினேன். பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு் சென்றேன். அங்கிருந்து போலீஸுக்கும் தகவல் கொடுத்தேன் என்று கூறியுள்ளார்.

இவரது புகாரின் பேரில் நால்வர் மீதும் கடத்தல், கொலை செய்யும் நோக்கில்கடத்தியது, பாலியல் பாலாத்காரம், கூட்டாக பலாத்காரம் செய்தல், குற்றச் செயலில் ஈடுபடுவது, காயம் ஏற்படுத்துவது, பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவருக்கு அபார்ஷன் செய்தது, விஷம் கொடுத்துக் கொல்லப்பார்த்தது, குற்றச் சதியில் ஈடுபடுவது,ஒருவரின் அந்தரங்கத்தில் தலையிடுவது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார்வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நான்கு பேருமே தற்போது தலைமறைவாக உள்ளனர். ஜெல்லியின் நண்பர்களின் பெயர் ஸ்வரன் சிங், மனீந்தர் சிங் மங்கா, சரன்ப்ரீத் சிங் என்று தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் ஜெல்லியின் மனைவி பரம்ஜீத் கெளரையும் போலீஸார் சேர்த்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட நடிகை திருமணமானவர். ஆனால் கணவரை விட்டுப் பிரிந்துவாழ்ந்து வருகிறார். விவாகரத்தும் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment