லிங்கா, பாபநாசம்... குறுகிய நாட்களில் ஷூட்டிங்கை முடிந்த ரஜினி, கமல்!

|

அனுபவம், தொழில் நேர்த்தி, சினிமா மீதான நேசம்... இவை நிரம்பப் பெற்ற கலைஞர்கள் தலைமுறைகளைத் தாண்டியும் கோலோச்சுவார்கள்.

உதாரணம் ரஜினி, கமல்.

கமல் 5 தசாப்தங்கள் தாண்டிய நடிகர். ரஜினி நாற்பது தசாப்தங்களைப் பார்த்தவர்.

இந்த இருவருமே படப்பிடிப்பு என்று வந்துவிட்டால் சின்சியர் திலகங்கள்.

இளைய தலைமுறை கலைஞர்களுக்கு இருவருமே மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்கிறார்கள்.

எப்படி என்று பாருங்கள்...

ரஜினி தன் லிங்கா படத்தை மே மாதம் தொடங்கினார். அன்றைக்கு வந்த செய்திகள், அவர் சும்மா 30 நாள்தான் நடிக்கப் போகிறார். அதிக ரிஸ்க் இல்லாத மாதிரி ஷூட்டிங் வைத்திருக்கிறார்கள் என்றனர்.

லிங்கா, பாபநாசம்... குறுகிய நாட்களில் ஷூட்டிங்கை முடிந்த ரஜினி, கமல்!

ஆனால் அவர் அந்த செய்திகளைக் கண்டு கொள்ளவே இல்லை. 100 நாட்கள் மராத்தான் மாதிரி, மைசூர், ஹைதராபாத், ஷிமோகா, மீண்டும் ஹைதராபாத் என் சுற்றிச் சுழன்றார். 24 மணி நேரத்தில் டப்பிங்கை முடித்தார். சொன்னபடி டிசம்பர் 12-ம் தேதி படத்தை வெளியிடத் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

இந்தப் பக்கம் கமல் ஹாஸன்...

பாபநாசம் படத்தின் ஷூட்டிங் இரு கட்டங்களாக நடக்கும் என்றார்கள். முதல் கட்டம் திருநெல்வேலியில். அடுத்தது கேரளாவில். இடையில் உடல் நிலை பாதிக்கப்பட்ட போதும், குறித்த நேரத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு... இதோ சென்னைக்கு வந்தேவிட்டார்.

லிங்கா, பாபநாசம்... குறுகிய நாட்களில் ஷூட்டிங்கை முடிந்த ரஜினி, கமல்!

இந்த இரு படங்களோடும் ஆரம்பிக்கப்பட்ட பல படங்கள் இன்னும் கால்வாசி, பாதி கூட முடியாமல் முணகிக் கொண்டிருக்கின்றன. திட்டமிட்டபடி இவர்கள் படப்பிடிப்பை முடித்ததில், தயாரிப்பாளர்களுக்கு பல கோடி செலவு மிச்சம் என்பதைச் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.

இன்றைய இளம் கதாநாயகர்கள், இயக்குநர்கள் இந்த சாதனையாளர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும்.. அப்போதுதான் சினிமா நிலைக்கும் என்றார் முன்னணித் தயாரிப்பாளர் ஒருவர்.

அது சொல்லிக் கொடுத்து வருவதில்லை. தானாக அமைவது. ரஜினிக்கும் கமலுக்கும் அப்படித்தான் அமைந்தது இந்தத் திரை ஒழுக்கம்!

 

Post a Comment